Pages

Monday, January 26, 2015

மரம் அமைதியை விரும்பினாலும்

இமைகளின் இடையில்
இறுக்கமாய்
பற்றி நிற்கும் சுவறுகள்

இனம் புரிய கவலையின் ஊடே
கடந்து செல்கிறது - இரவு

ஆறுதல் வார்த்தையை
அலைபேசி தொடர்புகளில்
துலவும் மனம்

இதயம் நிராகரிக்கும்
மூளையின் குரலாய்
"இதுவும் கடந்துபோகும் "

உள்ளம் சபிக்கும்
எனது "நேர்மை" -  மரம்
அமைதியை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை

No comments:

Post a Comment