Pages

Monday, January 26, 2015

இன்று எனது மணநாள்...

மல்லியும் முல்லையும்
முளைக்க மறுத்த
காய்ந்த கரிசல் பூமியில்
கனிவாய் பூத்த - கார்த்திகை
மலர் அவள்.

குறைகள் நிறைந்தும்
நிறைகள் குறைந்தும்
இருந்த என்னை நிறைவாய் ஏற்றவள்.

என்மகனையும் மட்டுமல்லாமல்
என்னையும் மகனாகி
பாசத்தோடு காதலை
பகிர்ந்தளிப்பவள்

இலக்கிய தலைவிப்போல
காற்றையும் நிலவையும்
தூதாக்கி என்னை
காதலிக்கிறாள்

அமரிக்க வாழ்க்கையை
வெறுக்க செய்வது
தனிமை அல்ல - அவள்
என்னோடு இல்லை என்ற
நிலைமை

நூற்றாண்டு வாழ்வு வேண்டாம்...
வாழும் காலம் மட்டும் நீ எனக்கு
வழித்துணையாய் - என்
விழித்துணையாய் வந்தால் ...
கால் நூற்றாண்டு வாழ்வு போதும்...

No comments:

Post a Comment