Pages

Wednesday, February 11, 2015

காதல் தேவன் தந்த சாபம்

நினைவலைகள்
கால எந்திரமாய் - என்னை
இழுத்துச் சென்ற அந்நாளில்...
ஒவ்வொரு பெண்ணும் 
திரை நாயகனை
காதலனாக்கி கனவு கண்டனர்
கல்லுரி காலத்தே
வலிந்து வந்த காதலை
விலக்கியதால் -எனக்கு
காதல் தேவன் தந்த
கடுமையான சாபம் போல..
முப்பது பெண்களுக்கு பிறகு
பெண்பார்க்கு படலங்கள்
மூடத்தனமாய் பட்டது...
ஆனாலும் கல்யாண சந்தையில்
மிகுந்த மதிப்பெனக்கு
ஆம் நான் பார்க்கும் பெண்களுக்கு
சட்டெண்டு திருமணம் ஆனதால் - எனக்கோ
முதிர் கண்ணனாய்
முன் முடி கொட்டிது...
பெண்பார்க்கு படலங்கள்
முப்பதிலிருந்து ஐம்பத்தாகியும்
தேடுதல் வேட்டை
தீயாய் தொடர்ந்தது
தொப்பை தெரிகிறது என்றாள் ஒருத்தி
உடையில் நேர்த்தி தெரியவில்லை என்றாள் ஒருத்தி
வயது அதிகம் என்றாள் ஒருத்தி
உயரம் குறைவு என்றாள் ஒருத்தி
பின்புலம் இல்லை என்றாள் ஒருத்தி
அன்றொருநாள்
நடு முற்றத்தில் தேவதையாய் நீ
நீண்ட தேடல் தந்த அயர்ச்சியுடன்
உன்னை பார்கிறேன் - என் மனம்
உரக்க உரைத்தது "இது ஆவதில்லை"
நீ மறுத்திருந்தால் கூட
வியப்பேதும் இல்லாமல்
அடுத்த தேடலுக்கு
நகர்திருப்பேன் - ஆனால்
பிடித்திருக்கிறதாம்
ஒற்றை வார்த்தைக்கு பிறகு
என் காதில் எதுவுமே விழவில்லை
உனக்கு நினைவிருக்கா?
அன்றும் அதன் பிறகு
ஒவ்வொரு முறையும்
அலைபேசியில் நான் கேட்ட
முதல் கேள்வி - உண்மையில்
என்னை பிடித்திருக்கா?
அன்று முதல்
அலைபேசி நிறுவனத்திற்கு - நான்
அதிகம் லாபம் தந்தேன்..
நம் அலைபேசிக்கு உணவு தந்தே
மின்வெட்டை அதிகமாக்கி
விட்டுருந்தது மின்சாரத்துறை
ஒவ்வொரு முறை பேசும்பொழுதும்
ஒரு இளையராஜா பாடலை
உனக்கு இயந்தளித்தேன்...
ஓயாமல் நான் பேசும் பேச்சுக்கு
நீ ஒற்றை வார்த்தையில்
பதிலளிப்பாய் - அதிகபட்சமாய்
"ம்ம்ம்ம்"
போகிறபோக்கில்
கவிதையை சுலபமாய்
உன் காதில் சொன்னது
எனது மனம்
ஒருமுறை நீ கேட்டாய்
எந்த நடிகை பிடிக்குமென்று...
ஐஸ்வர்யா அமோகா
என்று நான்சொல்ல...
பல் கடிபடும் ஓசையுடன் நீ சொன்ன
"அவளுக மட்டும் கைல கிடைத்தால்"
திரையில் பார்த்த காட்சிதான் எனினினும்
தேனாய் இனித்தது...
ஒரே முறை உன்னை சந்தித்தபொழுது
உனக்கொரு அலைபேசி பரிசளித்தேன்
நீயும் ஒரு பரிசளித்தாய் - உன்
உதட்டில் சாயம் பூசி
ஒரு தாள் முழுக்க முத்தமிட்டு...
அன்றுதான் எனக்கு தெரியும் - என்
டிவிஎஸ் 50 கூட பறக்கு என்று....
ஒருமுறை நீயாக அழைத்தாய்
அப்போதுதான் தோன்றியது
ஒருமுறைகூட நீயாக
என்னை அழைக்காதது
மகிழ்ந்து துள்ளியது
மனது - அதை அடக்கியது
கேவி அழும் உன் குரல்
-தொடரும்

1 comment:

  1. பிரமாதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete