Pages

Tuesday, December 14, 2010

ஜீவிதம்

உன்னோடு பேசாத
ஒவ்வொரு மணித்துளியும்
காதலாலும் கவலையாலும்
காற்றில் கரையுதடி

நீ நுழைந்த நெஞ்சத்தில்- வேறு
நினைவிற்கும் இடம் உண்டோ?
காதலியே கேட்கின்றேன்
அங்கு காற்றுகேனும்
இடமுண்டோ? - என்
உயிர் வாழ கேட்கவில்லை
என் உயிரே
உன்னுடன் வாழ கேட்கின்றேன்.

உனக்கொரு கவி எழுத
உட்காரும் பொது
வார்த்தைகள் ஆடும் சடு குடுவில்
வாயில் நுரைதள்ளி போகும்

வார்த்தைகள் சிக்காமல்
வருந்தி நிற்கும்போது
ஓடிபோன வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் வந்தமரும்.....
"உனக்காக வரவில்லை
உன்னவளுக்காய் வந்தோம் என்று"


சோகமான பொழுதுகளை
எல்லாம் சுகமாக்கும் உன் பேச்சு
உன் பேச்சு நிற்கும் கணத்தில்தான்
என்ன மூச்சு தொடருதடி.....

தயவு செய்து உன்
வெட்கத்தை விட்டுவிடேன்...
நானும் உன்னை "காதலிக்கிறேன் "
என்ற ஒற்றை வார்த்தையை
வாங்குவதற்குள் - தினமும் எனக்கு
உயிர்போய் திரும்புதடி ....

No comments:

Post a Comment