Pages

Tuesday, July 6, 2010

தேடுகிறேன்













வீணைகளும்
புல்லங்குழல்களும்
இசைக்கும் இடத்தில் எல்லாம்
தேடுகிறேன்
கண் இமைக்காமல்.....
எங்கிருந்து நீ தோன்றுகிறாய்.....?

வாசனைகள் எனக்கு ஈர்ப்பை
கொடுத்தில்லை.......
உன்னை முகரும் வரை....

உன் உதடுகள் சுமக்கும் புன்னகை
என் உயிர் குடித்தவை -
தெரியுமா உனக்கு......

உலக சோகங்களுக்கு
எல்லாம் அழ - உன்னால் முடிகிறது
எனக்குதான் உன்னை தாண்டி
யோசிக்க முடிவதில்லை.....

உந்தன் அகத்தின் அழகு
என் முகத்தில் - உன்
சுகங்களையும் துக்கங்களையும்
உன்னை விட அதிகமாக
பிரதிபலிப்பது நான்தானே

என்னிடம் கவிதைக்கான
வார்த்தை தீர்ந்துவிட்டது
உன் புன்னகை கொடேன் ......

இரு உடல்கள்
கூடி கொடுத்த - உன்
உடலை தேடவில்லை .......
இன்பம்தான் தேடல் என்றால்
இப்புவியில் எனக்கு
இடம் ஆயிரம் உண்டு....

மழை ஓடையில்
ஒய்யாரமாய் சென்ற
ஒற்றை குமிழி - பட்டெண்டு
உடைபட்டு - நினைவூட்டியது
உன் கோபத்தின் ஆயுளை ......


யாரோ வைத்திருந்த
மல்லிகை மணம் - நினைவூட்டியது
நமது வெள்ளிகிழமை
கோவில் சந்திப்பை

அம்மன் கோவில் ஐயர்
சொல்லும் மந்திரத்தின்
ஒவ்வொரு "ஸ்ரீ" யும் - நினைவூட்டியது
உந்தன் பெயரை.....

முன் சென்ற வாகனத்தின்
உரசிக்கொள்ளும்
காதலர்கள் - நினைவூட்டினர்
ஒருமுறைகூட நாம்
உரசிக்கொள்ளாததை


மரணத்தையும் விட
வலியை தரக்கூடியது
உன் மௌனம் .......

அது உடைபடுதல் என்பது
உலக அதிசயம்
அல்லவே ?

உடைபடுதல்
உனக்கும் இன்றி
எனக்கும் இன்பம்


பிரிவு என்பது புதிதல்ல....
நீ இம்முறை
என்னை பிரிவது என்பதும்
புதிதல்லவே.....

நான் உன்னைவிட்டு நீங்க
ஒருபோதும் நினைப்பது இல்லை ....

ஆனால்

நீ என்னை விட்டு நீங்க நினைத்தால்- நான்
100 மடங்கு வேகமாக அதை செய்வேன்

உனக்கு பிடித்தமான ஒன்றை
செய்வதைவிட எனக்கு
வேறு மகிழ்ச்சி என்ன இருக்கிறது ?

நீ இன்றயும்கூட
தொடரத்தான் செய்கின்றன
எனது நாட்கள்......
இருளாக.........

11 comments:

  1. Tamil its nice.have you time to write poem?

    ReplyDelete
  2. nice poet sir... yarukaga ithu..?

    ReplyDelete
  3. யாராக்காக சொல்ல......?
    ம்ம்ம்ம்ம்ம்

    அது ஒரு பட்டியலே வரும் கார்த்தி :)

    ReplyDelete
  4. @anburaj :
    இல்ல ராஜ்..... கிடைக்கிற நேரத்தில் எழுதியது.....

    ReplyDelete
  5. please remove word verification..

    ReplyDelete
  6. kadhalukku perumai serthavargal pattiyalil sathamindri ungal peyar serpaan iraivan - Karthikeyan.U ror.

    ReplyDelete
  7. Tamil-luku Ammuthendru Pear,
    Engal TamilMani-kum Ammuthendreaaa Pear....!
    .
    .
    .
    .
    .
    Super Sir.,

    ReplyDelete
  8. Syedvivekananda

    thala niga eppome great than ... ana innaiku intha arumaiyana kavitha eluthi innum ninga oru sirantha kavinnannu perum vangitinga.. gud luck Guru

    ReplyDelete
  9. @karthi : Thanks karthi

    @chellam : Thanks Chellam

    @syed : Thanks syed

    ReplyDelete