Pages

Tuesday, October 11, 2011

பிரிவு



வெற்றிடத்தை கற்று நிரப்புமாம்....
என்னில் வெற்றிடம் இன்றி - நீ
நிரம்பி இருக்கின்றாய்...
உனது நினைவை
வேரோடு அறுக்க முயன்று
தோற்கிறேன் ஒவ்வொரு நாளும்....
தோல்வியின் குருதியாக
கண்ணின் வழி நீராக....

எனக்கு சாவையும் தராமல்
வாழ்வையும் தராமல்
கொல்லாமல் கொல்கின்றன
உன் நினைவுகள்

உன் நினைவுகளை
சுவைத்து சுவைத்து - இதயம்
என் நினைவு கூட இன்றி
போதையில் உள்ளது


முன் பிறவி ஒன்றில் - உனக்கு
ஓர் ஏற்கமுடியாத பாவத்தை
செய்திருப்பேனோ..?
அப் பழி தீர்க்க
என் கண்ணில்பட்டாயோ?

உடலின் துளைகளெல்லாம்
கண்களாய் மாறி
கண்ணீர் விடுகின்றன...
என்னவள் இல்லை - நீ
என்ற நினைவே
உலக தண்டனைக்கெல்லாம்
தலைவனாய் தோன்றுகிறது..

No comments:

Post a Comment