Pages

Thursday, January 20, 2011

ஜீவிதம் 3

என் உணர்வுகளைவிடவும்
உன் உணர்வுகளைவிடவும்
உறவுகள் பெரியதா?

உன்னுடனான வாழ்க்கைதான்
என் வாழ்நாளை கூட்டுமே தவிர
உன் வார்த்தைகள் அல்ல
பிரிவுதான் இறுதி எனில்
என்மேல் பரிவு ஏனடி...

நீ சொல்லும்போது
தெரியாத வேதனை.....
நீ செல்லும்போது தெரியுதடி.....

ஊசி கொண்டு குத்தினாலே
உடையும் என் இதயம் - நீ ஏன்
சொல் ஈட்டி கொண்டு
குத்தினாய்?

8 comments:

  1. கவிதை நல்லாயிருக்குங்க....

    //நீ சொல்லும்போது
    தெரியாத வேதனை.....
    நீ செல்லும்போது தெரியுதடி.....//

    இந்த இடம் ரொம்ப அழகு!

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. //நீ சொல்லும்போது
    தெரியாத வேதனை.....
    நீ செல்லும்போது தெரியுதடி....//

    என்னங்க மேல என்னமோ எனக்கு எழுதவே தெரியாது அப்படின்னு சொல்லிட்டு இப்ப இந்த மாதிரி பீல் பண்ண வைக்குறீங்க .. இந்தக் கவிதை ரொம்ப அருமையா இருக்கு ,,

    ReplyDelete
  3. //சி.கருணாகரசு //

    நன்றி தலைவரே

    ReplyDelete
  4. @கோமாளி செல்வா

    நன்றி செல்வா.....

    இருந்தாலும் உங்களைபோல எழுதமுடியாது பாஸ்....
    அப்புறம் உங்க வீடு கோபில எங்க இருக்குனு சொல்லவே இலையே....
    நானும் கோபிகாரன்தான், வெள்ளளபாளையம்

    ReplyDelete
  5. அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பரே..

    ReplyDelete
  6. காதல் வலி........... கவிதை நல்லாய் இருக்கு

    ReplyDelete