Pages

Wednesday, January 5, 2011

ஜீவிதம்2

என் இதயம் வலிக்குதடி
நீ இல்லாத நொடியெல்லாம்...
நீ வரமாட்டாய் எனத் தெரிந்தும்
வழி நோக்கும் என் விழிகள்
ஏமாற்றப்பட்டோம் எனத்தெரிந்தும்
ஏங்கும் என் இதயம்.....

எனக்கான உன்காதல்
பொய்யாய் இருக்கலாம் - ஆனால்
உனக்கான என் காதல் மெய்யடி...

உன்னை சந்திக்கமாட்டேன் என
வெளியே சொல்லும் வாய்க்கும் என்ன தெரியும்...
உள்ளே துடிக்கும் இதயத்தின் நிலை?

உனக்காக நான்
உயிரையும் விடுவேன் - நீயோ
உறவுகளை விடவே யோசிக்கிறாய்...

என் இதயத்தில்
இன்னொருவளுக்கு இடமுண்டா?
அட நீ வேறு - அங்கு
எனக்கே இடமில்லை.
உருக்கி ஊற்றப்பட்ட உலோகமாக
ஒரு இடம் விடாமல் நிறைந்து விட்டாய்...

என் இதயம்
நீ இருந்தால் அது பூத்தோட்டம் - நீ
இல்லையேல் கல்லறை தோட்டம்.....

உன்னை தவிர என்ன இதய மண்ணில்
எதுவும் முளைக்காது.....
நீயே என் ஜீவிதம்

No comments:

Post a Comment